search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சல் பீதி
    X

    கும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சல் பீதி

    கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 14 மற்றும் 15-வது வார்டுகளுக்குட்பட்ட மா.பொ.சி. நகர் ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வசிக்கும் சிலர் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடமாடும் மருத்து வக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மா.பொ.சி. நகரைச்சேர்ந்த சதிஷ் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘ சிலருக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்பது சாதாரண காய்ச்சல் தான். அது டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது‘ என்றார்.

    Next Story
    ×