என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்று வியாபாரி தற்கொலை
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவருக்கும் மனைவி பாலாமணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியை தாக்கினார். இதிலும் கோபம் தணியாத அவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலாமணி தலையில் போட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலாமணி இறந்தார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததை நினைத்து வேதனை அடைந்தார்.
மேலும் போலீசுக்கு பயந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன்- பாலாமணி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்