search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் அருகே கார் விபத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் பலி
    X

    காங்கயம் அருகே கார் விபத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் பலி

    காங்கயம் அருகே கார் விபத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் பலியானார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காங்கயம்:

    சேலம் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 62). ரியஸ் எஸ்டேட் அதிபர். இவரது மகள் சுதா (36), மருமகன் பழனிமுருன் (41) ஆகியோருடன் நேற்று மாலை திருப்பூர் மண்ணரை சத்யா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர். காரை பழனிமுருகன் ஓட்டினார். கார் ஊத்துக்குளி- திருப்பூர் இடையே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு வந்தபோது அங்கு நின்ற லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ரியஸ் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிமுருகன், சுதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×