என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை பரவலாக மழை பெய்ததையடுத்து வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.
    பண்ருட்டி:

    தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுவதால் தென் தமிழகம் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்தது. கடலூர் நகரில் சாரல் மழை பெய்தது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கி பின்னர் பலத்த மழையாக பெய்தது.

    மேலும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.

    மக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி சென்றனர். முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது.

    ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுக்குப்பம், சேத்தாம்பட்டு, அம்புஜ வள்ளிபேட்டை, ஆத்தூர், முத்தரசன் பேட்டை, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.

    பண்ருட்டியில் பள்ளி மாணவிகள் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    Next Story
    ×