search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஜிபியிடம் என்மீது புகார் அளித்தவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன் - பொன் மாணிக்கவேல் பேட்டி
    X

    டிஜிபியிடம் என்மீது புகார் அளித்தவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன் - பொன் மாணிக்கவேல் பேட்டி

    டிஜிபியிடம் என்மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது என சிலை கடத்தல் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IdolWing #PonManickavel
    சென்னை:

    பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.
     
    இதற்கிடையே, சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இன்று மேலும் சில அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.

    இந்நிலையில், பொன் மாணிக்கவேல் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கூறியதாவது:

    டிஜிபியிடம் என்னைப் பற்றி புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது, என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என்மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. என்னைப் பற்றி அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. துறைக்குள் நடப்பதை போலீசார் வெளியே சொல்லலாமா?  என கேள்வி எழுப்பியுள்ளார். #IdolWing #PonManickavel
    Next Story
    ×