search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
    X

    போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

    போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாயனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேவர் காலனி, கிருஷ்ணாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வரும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டனர்.

    அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை போட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 150 மதுப்பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா, சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×