search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சமடைந்த நர்ஸ்
    X

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சமடைந்த நர்ஸ்

    வடமதுரை அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் நர்ஸ் தஞ்சமடைந்தார்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே மந்தைகுரும்ப பட்டியை சேர்ந்தவர் சத்யாதேவி (வயது20). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்பட்டியை சேர்ந்த பிரபாகரன்(வயது24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரபாகரன் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்த காதல்ஜோடி வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்.

    அதன்படி எரியோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அவர்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×