search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அருகே விபத்து - டிரைவர் பலி
    X

    எடப்பாடி அருகே விபத்து - டிரைவர் பலி

    எடப்பாடி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டுசாமி. இவரது மகன் சந்தானபாரதி (வயது 28). வேன் டிரைவர். திருமணம் ஆகவில்லை.

    இவர் கறிக்கடைகளுக்கு கோழிகள் சப்ளை செய்யும் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை சந்தானபாரதி வேன் மூலம் எடப்பாடி பகுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்த பின்னர், மீதமுள்ள கோழிகளுடன் சங்ககிரி நோக்கி வேனை ஓட்டிச் சென்றார்.

    எடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள கோனமோரி மேடு பகுதியில் காலேஜ் இறக்கம் பகுதியில் வேன் சென்றபோது, எதிர்திசையில் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்த சுற்றுலா பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வேன் டிரைவர் சந்தானபாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×