search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செண்பகவள்ளி
    X
    செண்பகவள்ளி

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் செண்பகவள்ளி (வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை செண்பகவள்ளி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகவள்ளியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    செண்பகவள்ளி சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தை முத்து கிருஷ்ணனின் ஆசைப்படி அவர் விவசாயம் தொடர்பான படிப்பை படித்தார். படிப்பில் அவர் ஆர்வமுடன் இருந்ததாக தெரிகிறது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவள்ளி தோழிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி இருந்தார். அவர்கள் கல்லூரி முடிந்து திரும்பி வருவதற்குள் செண்பக வள்ளி தற்கொலை செய்து விட்டார்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide
    Next Story
    ×