என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் தகவல்
Byமாலை மலர்10 Dec 2018 5:10 PM GMT (Updated: 10 Dec 2018 5:10 PM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா, மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் 100 சதவீதமும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 75 சதவீதமும், கிராம பகுதிகளில் 52 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 20 ஆயிரம் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு, சில நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
இதுவரை 20 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு ரூ.9 கோடியே 16 லட்சம் வங்கி கணக்கில் புயல் நிவாரண நிதியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர்கள் ஆதித்தியா, கார்மேகம், சினேகா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X