என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு இளம்பெண் சித்ரவதை- கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்10 Dec 2018 11:52 AM GMT (Updated: 10 Dec 2018 11:52 AM GMT)
சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
விருதுநகர்:
சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X