என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியை சேர்ந்தவர் புகழ்வேந்தன் (வயது 38). விவசாயி. இவரது மனைவி மேனகா (30). சமீபத்தில் வீசிய கஜா புயலில் புகழ்வேந்தனின் வீடு சேதமாகி விட்டது.
இதைத்தொடர்ந்து புகழ்வேந்தன் குடும்பத்தினர் வடக்கூரில் உள்ள அவரது மாமனார் ரெங்கசாமி வீட்டுக்கு சென்று அங்கு தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரெங்கசாமி வீட்டில் புகழ்வேந்தன், அவரது மனைவி மேனகா உள்ளிட்ட அனைவரும் தூங்கினர். அப்போது நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள் மேனகா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த மேனகா திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். இதனால் விழித்து கொண்ட அவரது குடும்பத்தினர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருளில் ஓடி மறைந்து தப்பி விட்டனர்.
இந்த துணிகர திருட்டு பற்றி மேனகா ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்