search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பயிற்சி டாக்டர்
    X
    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பயிற்சி டாக்டர்

    குமரியில் டாக்டர்கள் போராட்டம்- பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். #DoctorsProtest
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படவில்லை.

    இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள்.

    குமரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    9 அரசு ஆஸ்பத்திரிகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளும் இன்று முழுமையாக செயல்படவில்லை. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று புற நோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் செல்லவில்லை.

    காலை 6 மணிக்கே வந்த நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 100 பயிற்சி டாக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #DoctorsProtest
    Next Story
    ×