என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாழப்பாடி அருகே பெண் டாக்டரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடியை சேர்ந்தவர் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் மனைவி லீலாதேவி(வயது 35). இவர், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் பணி முடிந்ததும், நேற்று மாலை ஆத்தூரில் இருந்து சேசஞ்சாவடிக்கு பேருந்தில் வந்த மருத்துவர் லீலாதேவி, சேசன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இணைப் புச்சாலை வழியாக, அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவர் லீலா தேவியை வழிமறித்து, கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவர் லீலாவதி புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தங்கச்சங்கலியை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்