என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் திருட்டுதனமாக மதுபானம் விற்ற 7 பேர் கைது
    X

    முத்துப்பேட்டையில் திருட்டுதனமாக மதுபானம் விற்ற 7 பேர் கைது

    முத்துப்பேட்டையில் திருட்டுதனமாக மதுபானம் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பணை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பேட்டை அருகே புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து விற்பணை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஜாம்பவான் ஓடையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சுப்பிரமணியன், ராஜசேகர், முத்து, கணேசன், குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×