search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றி திரிந்த அக்கா-தம்பி மீட்பு
    X

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றி திரிந்த அக்கா-தம்பி மீட்பு

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு தனியாக சுற்றி திரிந்த அக்கா, தம்பியை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நேற்றிரவு வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது 1-வது பிளாட்பார்மில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் தனியாக நீண்ட நேரமாக சுற்றி சுற்றி வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகள் பிரியா (8) மற்றும் அவரது தம்பி அருள் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் எதற்காக வீட்டில் இருந்து அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 பேரையும் சேலம் மாநகர சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமி மற்றும் சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    Next Story
    ×