search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலி
    X

    போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலி

    போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது70).

    இவர் நேற்று வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலையை பின்னி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக லட்சுமியை சூழ்ந்து கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×