என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே நீதிபதி வீட்டில் துணிகர கொள்ளை
Byமாலை மலர்26 Nov 2018 9:51 AM GMT
திண்டுக்கல் அருகே நீதிபதி வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சொசைட்டி காலனியை சேர்ந்தவர் பிரவீன் குமார். ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சிவில் நீதிபதியாக உள்ளார். அவரது மனைவி நந்தினி. தாராபுரத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி தற்போது கர்ப்பமாக இருப்பதால் தாராபுரத்திலேயே தங்கி உள்ளார்.
நேற்று விடுமுறை என்பதால் தனது மனைவியை பார்ப்பதற்காக பிரவின்குமார் தாராபுரம் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மாடிக்கு சென்று லேப்டாப் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலையில் நீதிபதி வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து நீதிபதிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதோடு ஒட்டன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன பொருட்களின் விவரம் முழுமையாக தெரிய வில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள சொசைட்டி காலனியை சேர்ந்தவர் பிரவீன் குமார். ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சிவில் நீதிபதியாக உள்ளார். அவரது மனைவி நந்தினி. தாராபுரத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி தற்போது கர்ப்பமாக இருப்பதால் தாராபுரத்திலேயே தங்கி உள்ளார்.
நேற்று விடுமுறை என்பதால் தனது மனைவியை பார்ப்பதற்காக பிரவின்குமார் தாராபுரம் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மாடிக்கு சென்று லேப்டாப் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலையில் நீதிபதி வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து நீதிபதிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதோடு ஒட்டன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன பொருட்களின் விவரம் முழுமையாக தெரிய வில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X