search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை - வாலிபர் கைது
    X

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை - வாலிபர் கைது

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் அடுத்த ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    கடந்த 3-ந் தேதி மதுமதியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்23 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×