என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி பெயரில் கடன் மோசடி- கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது வழக்கு
Byமாலை மலர்19 Nov 2018 11:38 AM GMT (Updated: 19 Nov 2018 11:38 AM GMT)
விவசாயி பேரில் கடன் மோசடி செய்த புகாரில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலூர்:
கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.
குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.
குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X