search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய திமுக முன்னாள் எம்பி
    X

    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய திமுக முன்னாள் எம்பி

    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய திமுக முன்னாள் எம்பியை ஒரிஜனல் லைசென்சை எடுத்து வரும்படி போலீசார் எழுதி வாங்கி அனுப்பினர். #DMK
    கோவை:

    தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

    நேற்று கோவை வந்த இவர் இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அவர் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் இருந்து சத்தம் கேட்டது.சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 5 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ஜெயதுரையிடம் விசாரித்தனர்.

    கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக லைசென்சு தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் தவறுதலாக தோட்டாக்களை சூட்கேசில் எடுத்து வந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி லைசென்சுக்கான ஜெராக்சை காட்டினார். ஒரிஜனல் லைசென்சை இன்று கொண்டு வந்து காட்டுவதாக கூறினார். அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். #DMK
    Next Story
    ×