search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.70 லட்சம் பறித்த 3 வாலிபர்கள் கைது
    X

    செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.70 லட்சம் பறித்த 3 வாலிபர்கள் கைது

    ராயபுரம் அருகே செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.75 லட்சம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    ஏழுகிணறு கிரிகோரி தெருவை சேர்ந்தவர் ஜாபர். செல்போன் மொத்த வியாபாரி. இவரிடம் ஏழு கிணறை சேர்ந்த ரபீக்கான் வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி கடைகளில் வசூலான ரூ.70 லட்சம் பணத்துடன் ரபீக்கான் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ஏழுகிணறு பெரியண்ணா தெரிவில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென ரபீக்கானை வழிமறித்து சர மாரியாக வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.70 லட்சம் பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் தவமணி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் தாவூத், கும்மிடிபூண்டி கிஷோர், பொன்னேரி சதீஷ் என்பது தெரிந்தது.

    புதுச்சேரியில் பதுங்கி இருந்த அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இதுதொடர்பாக அவர்களது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×