என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே தையல்காரர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
Byமாலை மலர்8 Nov 2018 10:51 AM GMT (Updated: 8 Nov 2018 10:51 AM GMT)
களக்காடு அருகே தையல்காரர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வகுமார்(வயது40). தையல் தொழிலாளியான இவர் வள்ளியூரில் ஒரு தையல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் ஊரில் நின்றபோது அதே பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரிடம் மணி என்பவரது மகன்கள் பொன் இசக்கி(27), இசக்கிமுத்து(23) ஆகியோர் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர்.
அதற்கு மாயக்கிருஷ்ணன் மறுத்தார். அப்போது ஆல்பர்ட் செல்வகுமார் மாயகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசி பொன்இசக்கியையும், இசக்கிமுத்தையும் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரின் வீட்டுக்கு பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரும் வந்தனர்.
இருவரும் மோட்டார்சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் வெகு நேரமாகியும் ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை. இதனால் ஆல்பர்ட் செல்வகுமாரை அவரது வீட்டில் தேடினார்கள். இதனிடையே அப்பகுதியில் உள்ள பச்சையாறு கரையில் நேற்று ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு ஆல்பர்ட் செல்வகுமாரின் உடல் தனியாகவும், சற்று தூரத்தில் தலை தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, தெற்கு காடுவெட்டி வரை ஓடிச் சென்றது. இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பொன் இசக்கியும், இசக்கிமுத்துவும் சேர்ந்து ஆல்பர்ட் செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ஆல்பர்ட் செல்வகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொலையாளி பொன் இசக்கி டிரைவராக உள்ளார். இசக்கிமுத்து கட்டிட வேலைச் செய்து வருகிறார். தையல் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வகுமார்(வயது40). தையல் தொழிலாளியான இவர் வள்ளியூரில் ஒரு தையல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் ஊரில் நின்றபோது அதே பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரிடம் மணி என்பவரது மகன்கள் பொன் இசக்கி(27), இசக்கிமுத்து(23) ஆகியோர் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர்.
அதற்கு மாயக்கிருஷ்ணன் மறுத்தார். அப்போது ஆல்பர்ட் செல்வகுமார் மாயகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசி பொன்இசக்கியையும், இசக்கிமுத்தையும் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரின் வீட்டுக்கு பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரும் வந்தனர்.
இருவரும் மோட்டார்சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் வெகு நேரமாகியும் ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை. இதனால் ஆல்பர்ட் செல்வகுமாரை அவரது வீட்டில் தேடினார்கள். இதனிடையே அப்பகுதியில் உள்ள பச்சையாறு கரையில் நேற்று ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு ஆல்பர்ட் செல்வகுமாரின் உடல் தனியாகவும், சற்று தூரத்தில் தலை தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, தெற்கு காடுவெட்டி வரை ஓடிச் சென்றது. இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பொன் இசக்கியும், இசக்கிமுத்துவும் சேர்ந்து ஆல்பர்ட் செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ஆல்பர்ட் செல்வகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொலையாளி பொன் இசக்கி டிரைவராக உள்ளார். இசக்கிமுத்து கட்டிட வேலைச் செய்து வருகிறார். தையல் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X