என் மலர்
செய்திகள்

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.
தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பினர்- பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்:
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை அவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான கார்களிலும், பஸ்களிலும் அவர்கள் வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பெருங்களத்தூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்தன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை அதிகாலை முதல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள், தனியார்கள் பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
காலை சுமார் 10 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரானது. நெரிசல் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து இருந்தது.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை அவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான கார்களிலும், பஸ்களிலும் அவர்கள் வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பெருங்களத்தூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்தன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை அதிகாலை முதல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள், தனியார்கள் பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
காலை சுமார் 10 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரானது. நெரிசல் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து இருந்தது.
Next Story






