search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 7 பேர் கைது- 23 பேர் மீது வழக்கு
    X

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 7 பேர் கைது- 23 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×