search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலை கவிழ்க்க முயற்சி - தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்த மர்ம நபர்கள்
    X

    ரெயிலை கவிழ்க்க முயற்சி - தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்த மர்ம நபர்கள்

    விருத்தாச்சலம் பயணிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்துள்ளதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் ரெயில் இன்று காலை 9 மணிக்கு ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது கூத்தக்குடி முகாச பாரூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இந்த சிலாப்பின் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதனால் சிலாப் தூள், தூளாக உடைந்து சிதறியது. இதை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை அங்கு நிறுத்தி, விட்டு, உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உயர் அதிகாரிகள், ஆர்.பி.எப். போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும் தண்டவாளம் சேதமாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த உடைந்த சிலாப் துண்டுகளை அகற்றி, தண்டவாளத்தை சரி செய்தனர். அதன் பிறகு ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்றது.

    ரெயிலை கவிழ்க முயன்ற நாசகார கும்பல் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க கூத்துக்குடி மற்றும் முகாச பாரூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×