search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    நிலக்கோட்டை அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

    நிலக்கோட்டை அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் திருப்பதி ராஜா (வயது 20). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சகோதரி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்பினார். செம்பட்டி வந்த சகோதரியை அழைப்பதற்காக நிலக்கோட்டையில் இருந்து பைக்கில் திருப்பதி ராஜா சென்றுள்ளார்.

    செங்கோட்டை பிரிவு பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரியின் அடியில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த திருப்பதி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×