search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை
    X

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை

    கடலூர்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிமுதல் மழை பெய்யத்தொடங்கியது. கடலூர் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து பெய்தது.

    நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடலூர், திருப்பாதிரி புலியூர், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதுபோல் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வீரமுடையான் நத்தம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதுபோல் ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுகுப்பம், சேத்தம்பட்டு, காவனூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்பும், பலத்த காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் இன்று2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பரங்கிப்பேட்டை 6 மில்லி மீட்டர்.

    அண்ணாமலைநகர் -58.80

    சிதம்பரம் -46.80.

    கடலூர்-29.30

    வானமாதேவி-16.50

    பண்ருட்டி-9.20

    ஸ்ரீமுஷ்ணம்-9.10

    குப்பநத்தம்-7.50

    மாவட்டம் முழுவதும் 461.25 மி.மீ. மழை பெய்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, எண்டியூர், பிரம்மதே‌ஷம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. 9 மணி வரை பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எக்கியார்குப்பம், கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் கொந்தளிப்பும், சூறைகாற்று வீசுவதால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டன.

    Next Story
    ×