என் மலர்
செய்திகள்

தூளியில் விளையாடிய போது வீட்டின் சுவற்றில் மோதி பள்ளி மாணவி மரணம்
தூளியில் விளையாடிய போது சுவற்றில் மோதி 2-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பாபு இவரது மகள் சோபியா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த சோபியா புடவையில் தொங்கவிடபட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது தூளியில் சோபியா வேகமாக விளையாடியதால் வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
இதில் சோபியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். மகளை கண்ட பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சோபியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பாபு இவரது மகள் சோபியா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த சோபியா புடவையில் தொங்கவிடபட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது தூளியில் சோபியா வேகமாக விளையாடியதால் வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
இதில் சோபியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். மகளை கண்ட பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சோபியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story






