search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் லாட்டரி சீட்டு-மதுபானம் விற்றவர்கள் கைது
    X

    ஜெயங்கொண்டத்தில் லாட்டரி சீட்டு-மதுபானம் விற்றவர்கள் கைது

    ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு மற்றும் மதுபானம் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  மார்க்கெட் கமிட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார்   தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை  ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. 

    விசாரனையில் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜா(49) என்பது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜா மீது வழக்குபதிந்து கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.  

    ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர்  சிலைக்கு அருகில்  உள்ள பாவுப்பட்டரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மறைத்து வைத்து மது பாட்டில்கள்  விற்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் ஜெயங்கொண்டம் கீழக்குயிருப்பு  புதுத்தெருவை சேர்ந்த அன்பழகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அன்பழகனை கைது செய்து மதுபாட்டில் களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×