search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பேத்கருக்கு சிலை அமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்
    X

    அம்பேத்கருக்கு சிலை அமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் அரங்க முதல்வன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அக்பர் அலி, வீர துரைசாமி, சதாசிவம், சரவணன், வெற்றிச்செல்வன், பெரிய கலையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மண்டல அமைப்புச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழனிச்சாமி, மனித நேய மக்கள் கட்சியின் சித்திக், தமிழ் நாட்டு மக்கள் இயக்க செல்வம் உள்பட பல்வேறு கட்சி சேர்ந்த பிரதிநிதிகள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×