என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக்கம் அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை
Byமாலை மலர்31 Oct 2018 9:57 AM GMT (Updated: 31 Oct 2018 9:57 AM GMT)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் கொதிகலன் (பாய்லர்) இயக்குனரக அலுவலகம் உள்ளது.
இங்கு கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கொதிகலன் இயக்குனரான சக்திவேல் என்பவரது காரில் இருந்து ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் சிக்கியது. மேலும் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்தும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே அலுவலகத்தில் துணை இயக்குனராக இருக்கும் சிவகுமாரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.15 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. அலுவலக பணியாளர் ஒருவரிடமிருந்து ரூ.3500 சிக்கியது. இந்த 2 சோதனைகளிலும் மொத்தம் ரூ.3½ லட்சம் பணம் பிடிபட்டது. தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கொதிகலன்கள் பயன்படுத்தக் கூடிய திறனுடன் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் பணியையே கொதிகலன் இயக்குனர் அலுவலகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் தொழில் நிறுவனங்களிடமிருந்து மாமூலாக இந்த பணம் பெறப்பட்டிருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி இருக்கும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் கொதிகலன் (பாய்லர்) இயக்குனரக அலுவலகம் உள்ளது.
இங்கு கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கொதிகலன் இயக்குனரான சக்திவேல் என்பவரது காரில் இருந்து ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் சிக்கியது. மேலும் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்தும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே அலுவலகத்தில் துணை இயக்குனராக இருக்கும் சிவகுமாரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.15 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. அலுவலக பணியாளர் ஒருவரிடமிருந்து ரூ.3500 சிக்கியது. இந்த 2 சோதனைகளிலும் மொத்தம் ரூ.3½ லட்சம் பணம் பிடிபட்டது. தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கொதிகலன்கள் பயன்படுத்தக் கூடிய திறனுடன் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் பணியையே கொதிகலன் இயக்குனர் அலுவலகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் தொழில் நிறுவனங்களிடமிருந்து மாமூலாக இந்த பணம் பெறப்பட்டிருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி இருக்கும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X