என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை பீளமேட்டில் மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்29 Oct 2018 4:53 PM GMT (Updated: 29 Oct 2018 4:53 PM GMT)
கோவை பீளமேட்டில் மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் பணம் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காந்திமாநகர் ஸ்ரீராம்நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவர் விநாயக புரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றார். அவர், நள்ளிரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மகேந்திரன் வீட்டை கண்காணித்து திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திமாநகர் ஸ்ரீராம்நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவர் விநாயக புரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றார். அவர், நள்ளிரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மகேந்திரன் வீட்டை கண்காணித்து திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X