search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலில் நஷ்டம்- ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
    X

    தொழிலில் நஷ்டம்- ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ்நிறுத்தம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 49).

    இவர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு கடை வைத்து நடத்தி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) எடுத்து சந்திரசேகர் குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்காக போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×