என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Byமாலை மலர்22 Oct 2018 6:08 AM GMT (Updated: 22 Oct 2018 6:08 AM GMT)
பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X