search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி-  முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
    X

    பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    Next Story
    ×