என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கனமழை- 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது
Byமாலை மலர்17 Oct 2018 5:08 PM GMT (Updated: 17 Oct 2018 5:08 PM GMT)
நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.
காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–
நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X