search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - காதர் மொகிதீன்
    X

    எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - காதர் மொகிதீன்

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #DMK #Election

    பாபநாசம்:

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உயர் கல்வித் துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ஊழல் நடந்துள்ளது. எனவே தமிழக கவர்னரை மாற்றவேண்டும் எனவும் கூறி வருகிறார். இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கருத்தாக உள்ளது.

    இந்த நிகழ்வு தமிழக கல்வித் துறைக்கு மிகப் பெரிய அவமானம். இது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கூறி வருகிறார். இது தமிழக அரசியலுக்கு மிகபெரிய அவப்பெயராகும்.

     


    தமிழகத்தில் கல்வி, ஒழுக்கம், அரசியல் நாகரிகம், நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, என்று தமிழகத்தில் நிறைந்திருந்த காலம் போய் தற்போது தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது. மு.க.ஸ்டாலின் கூறியது போல் தமிழக அரசு கலெக்சன், கமி‌ஷன், கரப்சன் ஆட்சி என கூறி வருவது உண்மை என தமிழக அரசியல் நடுநிலையாளர்கள் எண்ணுகின்றனர்.

    காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். இது அவரின் சொந்த கருத்தாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் தோழமையுடன் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் இந்திய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×