என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து பிடுங்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்களும் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம கும்பலை கைது செய்ய கோரி திடீரென அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் விரைந்து வந்தனர். உடனே மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மர்ம கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு விடுதலை சிறுத்தைக் கட்சியினர் கலைந்து சென்றனர்,
இந்த மறியல் போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்