என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வானிலை மையமும் அரசியல் செய்கிறது- தினகரன் குற்றச்சாட்டு
By
மாலை மலர்8 Oct 2018 6:09 AM GMT (Updated: 8 Oct 2018 7:43 AM GMT)

வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் (ரெட் அலர்ட்) செய்கிறது என இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்து டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைத் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்.

தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அது மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படுகிறது. இப்போது வானிலை ஆய்வு மைய அறிக்கையும் நம்ப முடியவில்லை. வானிலை மையமும் இப்போது அரசியல் செய்கிறதோ என்று நம்பத்தோன்றுகிறது. நேற்று ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால் மழையே இல்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது அப்போதைய கவர்னர் வித்தியாசாகர்ராவ் என்னைப் பார்த்தே சொன்னார். கல்வித்துறை தொடர்பாக நிறைய புகார்கள் வருகின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் பேசி கமிட்டியை சரியாக அமைத்து அதை சரி செய்ய வேண்டும் என்றார்.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் நிலம் கொண்டது. அங்கு நிறைய கட்டிடங்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். அது நல்ல கல்லூரி என்று பெயர் பெற்றதுதான். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இவ்வளவு பெரிய நிலம் உள்ளது.
ஆனால் நீங்களோ நானோ அரை சென்ட் நிலத்தை எடுத்தால் என்ன செய்வார்கள். தெரியாமல் கம்பி வேலி போட்டால் கூட தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் குண்டர் தடுப்பு சட்டமே போட்டு விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைத் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பு நவம்பரில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அது மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படுகிறது. இப்போது வானிலை ஆய்வு மைய அறிக்கையும் நம்ப முடியவில்லை. வானிலை மையமும் இப்போது அரசியல் செய்கிறதோ என்று நம்பத்தோன்றுகிறது. நேற்று ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால் மழையே இல்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது அப்போதைய கவர்னர் வித்தியாசாகர்ராவ் என்னைப் பார்த்தே சொன்னார். கல்வித்துறை தொடர்பாக நிறைய புகார்கள் வருகின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் பேசி கமிட்டியை சரியாக அமைத்து அதை சரி செய்ய வேண்டும் என்றார்.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் நிலம் கொண்டது. அங்கு நிறைய கட்டிடங்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். அது நல்ல கல்லூரி என்று பெயர் பெற்றதுதான். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இவ்வளவு பெரிய நிலம் உள்ளது.
ஆனால் நீங்களோ நானோ அரை சென்ட் நிலத்தை எடுத்தால் என்ன செய்வார்கள். தெரியாமல் கம்பி வேலி போட்டால் கூட தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் குண்டர் தடுப்பு சட்டமே போட்டு விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
