search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை
    X

    திருச்செந்தூர் அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

    திருச்செந்தூர் அருகே சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே குமாரபுரம் அன்புநகர் மெயின் ரோட்டின் நடுவே மின் கம்பம் ஒன்று உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை சாலை ஒரத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு குமாரபுரம் ஊர் நலக் கமிட்டி சார்பில் அதற்கான தொகை மின் வாரிய அலுவலகத்திற்கு செலுத்தியுள்ளனர்.

    இதையடுத்து மின் கம்பத்தை மாற்றி வைக்க பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×