search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
    X

    மேலூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

    மேலூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே திருவாதவூரை அடுத்துள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் முத்தாண்டி. விவசாயியான இவர் அந்தப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    நேற்று முத்தாண்டி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 10 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய முத்தாண்டி, கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×