என் மலர்

    செய்திகள்

    கடையம் அருகே வாலிபர் மீது தாக்குதல்- அண்ணன்-தம்பி கைது
    X

    கடையம் அருகே வாலிபர் மீது தாக்குதல்- அண்ணன்-தம்பி கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று  வயலில் வைத்து இவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.  

    இந்நிலையில் திருப்பதி அவரது தம்பி சக்திவேல் இருவரும் சேர்ந்து இளையராஜாவை தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த இளையராஜா விஷம் குடித்தார். 

    இந்நிலையில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பதி, சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×