search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
    X

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்திரவிளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லி ரோந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக சகாதேவன் (வயது 60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலாம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அருளப்பன் (65), சுந்தரம்பாய் ஆகியோர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் களியக்காவிளை, தக்கலை, ஈத்தாமொழி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்புக்குட்டன் (57), நாகராஜன் (31), கணேசன் (61) ஆகியோரை அனுமதியின்றி மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×