search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #AIIMS #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக் கையில் கூறி இருப்பதா வது:-

    சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா முழுவதும் 9 இடங்களில் மட்டுமே எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசு புதிதாக 14 இடங்களில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் உயர் சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.அதில் ஏற்கனவே புதிதாக 10 இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின் றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய மத்திய- மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத் துறை பிற துறைகளுடன் இணைந்து சுற்றுச்சூழல், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள், அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மதுரை தோப்பூரில் அடையாளங் காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட் ரோல் குழாய்கள் மாற்றியமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

    சுமார் ரூ.1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவமைக்கப்படும். முறையாக தயார் செய்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள்.

    இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு ஏன் ஒப்புதல் ஆணை இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம் யாருக்கு வழங்கபட்டிருக்கிறது? கருவுற்ற பின்புதான் குழந்தை பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம் தேவை அதுபோலத்தான் இதுவும்.

    ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்தியமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும். என்னை பொறுத்தவரை தமிழக பா.ஜ.க. சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும், பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை. எய்ம்ஸ் அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AIIMS #TamilisaiSoundararajan
    Next Story
    ×