search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்டியலை கவனித்தவர்கள் சிலையை மறந்து விட்டார்கள் - தமிழிசை கருத்து
    X

    உண்டியலை கவனித்தவர்கள் சிலையை மறந்து விட்டார்கள் - தமிழிசை கருத்து

    உண்டியல்களை மட்டும் கவனித்தவர்கள் சிலைகளை மறந்து விட்டார்கள் என கோவில் சிலை திருட்டு குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். #IdolTheft #TamilisaiSoundararajan
    சென்னை:

    சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் சிலைகள் மீட்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    சென்னை சைதாப்பேட்டையில் தமிழக கோவில்களில் காணாமல் போனதாக கருதப்படும் 80-க்கும் மேற்பட்ட சிலைகளை தேடி கண்டுபிடித்த சிலை தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் காவல் துறையின் பணி பாராட்டத்தக்கது.

    தமிழக அரசின் அறங்காவலர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களில் உள்ள கடவுள் சிலைகளை காக்க தவறிய உண்மை நிரூபணமாகிறது.

    உண்டியல்களை மட்டுமே கவனித்தவர்கள் சிலைகளை கண்காணிக்க மறந்தது ஏன்? இந்து ஆலய நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolTheft #TamilisaiSoundararajan
    Next Story
    ×