search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு - நாளை விசாரணை
    X

    கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு - நாளை விசாரணை

    நடிகர் கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை அளித்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. #Karunas #KarunasCustody
    சென்னை:

    தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


     
    இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு 26ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, கருணாசின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து நாளை இந்த மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.  #Karunas #KarunasCustody
     
    Next Story
    ×