search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    பண்ருட்டி அருகே தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த தொழிலாளி முந்திரிதோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சுரேஷ் (வயது 17). தொழிலாளி.

    இந்த நிலையில் சுரேசின் நடவடிக்கை சரியில்லை என கூறி அவரது தந்தை செந்தில்குமார் கண்டித்தார். இதனால் மனம் உடைந்த சுரேஷ் அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்கு சென்றார். அங்குள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுரேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×