search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகிங் புகார்- கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்கள் அதிரடி நீக்கம்
    X

    ராகிங் புகார்- கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்கள் அதிரடி நீக்கம்

    அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் ராகிங் புகாரை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்களை நீக்கி வேலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.

    விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×