என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார் கோவிலில் லாரி டிரைவர் பாம்பு கடித்து பலி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லாரி டிரைவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.
செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.
செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story