என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டுமன்னார் கோவிலில் லாரி டிரைவர் பாம்பு கடித்து பலி
Byமாலை மலர்6 Sep 2018 11:16 AM GMT (Updated: 6 Sep 2018 11:16 AM GMT)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லாரி டிரைவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.
செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.
செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X