என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது
பண்ருட்டி அருகே கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி:
கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு 11 மணி அளவில் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த லாரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு அந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர், கிளினர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்துசென்று போக்குவரத்தை சரி செய்தனர். பின்பு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த லாரி அகற்றப்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு 11 மணி அளவில் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த லாரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு அந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர், கிளினர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்துசென்று போக்குவரத்தை சரி செய்தனர். பின்பு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த லாரி அகற்றப்பட்டது.
Next Story